சத்தீஸ்கரில் உள்ள ஓரச்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்ஸல்களால் பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் ஆயுதப்படையினர் அங்கு  ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆயுதப்படையின் 16-வது பிரிவை சேர்ந்த சஞ்சய் அக்ரா என்னும் தலைமை காவலர் நக்ஸல்களால் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் தெரியாமல் கால் வைத்துள்ளார்.

இந்நிலையில்  கண்ணிவெடி வெடித்து சிதறியதில் சஞ்சய் உயிரிழந்துள்ளார். அவர் ஜாஸ்பர் மாவட்டத்தை சேர்ந்தவர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹோம சாகர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.