விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாதம் 1ஆம் தேதி வரும் அம்மாவாசை தரிசனத்திற்காக வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் ஜூலை 18ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் காலை 7 மணி முதல் நட்புகள் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் கோவில்களுக்கு வருபவர்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்க கூடாது எனவும் கோவிலில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.