தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் 3600 இடங்களில் மகளிர் உரிமை தொகைக்கான முகாம்கள் நடைபெற உள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள 1415 ரேஷன் கடைகளில் தன்னார்வலர்களை நியமித்து விண்ணப்பங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மகளிர் உரிமைத்தொகை முகாம் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிருக்கான தகுதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் நியாய விலை கடைகளில் அதற்கான முகாம்கள் நடத்தப்படும் என்றும் சிறப்பு முகாம்கள் ஜூலை 24ம் தேதி முதல் தொடங்கும் எனவும் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.