விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்கு செல்லும் பாதைகளில் ஓடைகள் உள்ளன.

டிசம்பர் மாதத்திற்கான பிரதோஷம் மற்றும் அமாவாசை ஜெனத்தை முன்னிட்டு இன்று முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொடர் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அதனால் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்களுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.