தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் திடீரென ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து புதிய தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த பருவ தேர்வுக்கு உரிய வினாத்தாள்களை தனியார் பிரவுசிங் சென்டர்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் இதனை பகிர தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.