ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் அமைந்திருக்கும் சுந்தரம் மகாலிங்கம் கோவில் வெகு பிரசித்தி பெற்றது. அங்கு ஐப்பசி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அக்டோபர் 26 இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 28 பௌர்ணமி அன்று அன்னாபிஷேகமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.