மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மாவட்ட எல்லையில் சதுரகிரி மகாலிங்கம் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று புதன்கிழமை முதல்  நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வருகை தரும் பக்தர்கள் புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர். மேலும் குழந்தைகள், முதியோர்கள் மலை ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.