பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15(நாளை) முதல் 31 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3 ஆண்டு சட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.