கர்நாடகா மாநிலம் கலபுருகி மாவட்டத்திலுள்ள பீமா நதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் தடுக்க சென்றனர். அப்போது கொள்ளையர்கள் காவல்துறை அதிகாரி மீது ட்ராக்டர் ஏற்றி கொலை செய்தனர்.

இதையடுத்து காவல்துறை அதிகாரி என்று பாராமல் அவர் மீது ட்ராக்டர் ஏற்றி கொலை செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே கொள்ளை கும்பலை சேர்ந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவானவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.