திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனிடையே சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.