இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தோல்வியைத் தழுவியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில், கடந்த டி20 உலகக்கோப்பையில் ‘தொடர் நாயகன்’ விருதை வென்ற சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக, அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் களத்தில் தடுமாறி 10 பந்துகளில் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்தது அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
சஞ்சு சாம்சனை அணியிலிருந்து நீக்கிய தேர்வுக்குழுவின் முடிவை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாகச் சாடியுள்ளார். இது “கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் விசித்திரமான முடிவு” என்று அவர் தனது சமூக வலைதளத்தில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Great to see Vaibhav in India colours. But what about Samson! Dropped?? Are you kidding me!
No, I guess, injured. Let’s hope it’s injury. Or it’s the most bizarre selection.
Could have easily batted at 3 if you wanted to get Vaibhav in.
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) July 5, 2026
“>
சாம்சன் காயமடையவில்லை என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தெளிவுபடுத்திய நிலையில், இது ஒரு திட்டமிட்ட முடிவு என்று தெரியவந்துள்ளது. சாம்சனை மூன்றாவது வீரராகக் களமிறக்கியிருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த மோசமான அணித் தேர்வு இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளது.
