கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலில் இருந்து மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ள சித்து, ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலி மூன்றாவது பேட்ஸ்மேன் ஆக விளையாட கூடாது. கோலி ஓய்வு பெறுவதற்கு முன்னர் நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.