தன்னை ‘கிங்’ என்று கூப்பிட வேண்டாமென ரசிகர்களுக்கு ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் அவ்வாறு அழைக்கும் போது எனக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். இனிமேல் என்னை விராட் என்று அழைத்தால் போதும்’ என்றார். இதனால் இனி அப்படி கூப்பிடக்கூடாதா? என்று விராட் கோலியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் ரசிகர்களுக்கு அவரை கிங் என்று அழைப்பது ரொம்ப பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.