வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி கல்புதூர் மாருதி நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெடுஞ்சாலை துறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு குமார் குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். இன்று காலை குமாரின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் மர்ம நபர்கள் 60 பவுன் நகைகள், 4 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.