உத்தரபிரதேசத்தில் கோயில்களின் அருகில் அதன் உயரத்தை விட அதிக உயரம் கொண்ட கட்டடங்களை அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கோயில்களின் பழமை மற்றும் வரலாற்று அம்சங்களை பாராமரிக்கும் வகையில், கோரக்பூர், வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் கோயில்களின் உயரத்திற்கு மேல் எந்த வகையான கட்டடங்களையும் கட்ட அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.