தெலங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நாகனூல் கிராமத்தை சேர்ந்த சிவா – லட்சுமி கலா. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்து 40 நாட்களுக்கு முன்னாள் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் லட்சுமி. அப்போது தனியாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது.

பின்னர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை முடிந்து மீண்டும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் குழந்தையை எலி கடித்துள்ளது. மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.