கோடை காலத்தில் வாகனங்களை பராமரிப்பது அவசியமான ஒன்றாகும். கோடை வெப்பம் அதிகரிக்க கூடிய காலத்தில் வாகனங்கள் எளிதில் தீப்பற்றி எரியக்கூடும். சில நேரங்களில் டயர்கள் வெடிக்கவும் செய்கின்றன. அதனைப் போலவே கோடை காலத்தில் இருசக்கர வாகனங்களில் ஒன்று முதல் இரண்டு லிட்டர் பெட்ரோலுக்கு மேல் நிரப்ப வேண்டாம்.

முழு கொள்ளளவில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பினால் வெப்பநிலையுடன் அழுத்தம் அதிகரிப்பதால் வாகனம் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. கார் எஞ்சினில் குளிரூட்டும் இயந்திரம் காணப்படும். இருந்தாலும் ரேடியேட்டரில் தண்ணீர் குறையாமல் பார்த்துக் கொள்ளவும்.