புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் அதிகாரி மீது உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புதுச்சேரியில் 9 வயது சிறுமி பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.