புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை பெற, அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சோலை நகரைச் சேர்ந்த சிறுமி மார்ச் 2ஆம் தேதி மாயமான நிலையில், வாய்க்காலில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் 59 வயது நபர் உள்பட 2 பேர் கைதாகியுள்ளனர். இதனிடையே குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி சிறுமியின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.