கொரோனா பரவல் உலகம் முழுவதும் பரவி கடந்த 2 ஆண்டுகள் உலகம் முழுவதும் பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. பாதிப்புகள், உயிரிழப்புகள் என தொடர்ந்துவந்த நிலையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே பாதிப்பு குறைந்து கட்டுக்குள் வந்தது. கொரோனாவின்போது  தொற்று பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வருவதற்கு ஒருசில நாட்கள் கூட ஆனது.

இந்நிலையில் பழக்கப்படுத்தப்பட்ட நாய்களால் கொரோனா பாதிப்பை பிசிஆர் சோதனையை விட திறம்பட கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை அறிய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வருவதற்கு 24 மணி நேரம் வரை ஆனது. இந்நிலையில் நாய்களை பழக்கப்படுத்தினால், அதன் மூலம் கொரோனா பாதிப்பை அறிய முடியும் என கலிபோர்னியாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.