வனப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு  சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிவடைந்ததும், சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை உள்ளடக்கி கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புது பொலிவுடன் நாளை முதல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள், புதிய கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்கள் முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். மேலும், பேரிஜம் சுற்றலா தலத்திற்கு செல்ல நாள் ஒன்றுக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.