கொடைக்கானலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சுற்றுலா சென்று வருகிறார்கள். தமிழகத்தில் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக திகழும் கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பைன் மரச்சோலையில் சுற்றுலாப் பயணிகள் வேன்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதன் எதிரொலியாக வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம் , பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.