கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி நேஹா(23) மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து முஸ்லீம் அமைப்புகள் நாளை பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளன. தார்வார்ட்டைச் சேர்ந்த அஞ்சுமன்-இ-இஸ்லாம் தலைவர் இஸ்மாயில் தமட்கர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகவும், இறந்த ஆன்மாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஏப்ரல் 22 திங்கள் கிழமை காலை 10 முதல் 3 வரை பந்த் நடைபெறும்” என கூறினார்.