திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பக்கத்தில் உள்ள பன்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மதுரையில் வசிக்கும் பரமசிவம்(40). இவர் அந்த பகுதியில் உள்ள திடீர்நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் சென்று தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் குழந்தையை பள்ளிக்கு அனுப்புங்கள் என காவலர் ஒருவர் பெற்றோருக்கு அறிவுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘குற்றங்களை தடுப்பது மட்டுமல்ல நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் காவலர் பங்கு உண்டு. குழந்தைகள் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை SI பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்’ என ட்வீட் செய்துள்ளார்.