நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் ‘வெடிகுண்டு வெடிக்கும்’ என வாட்ஸ்அப்பில் பதிவிட்ட காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் விடுத்தவர் நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அன்பு ரோஸ் ஆகும். இவர் ரூபி மனோகரன் ஆதரவாளர் என்பதால் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்ட கூட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.