உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கர்ப்பிணி நாய் ஒன்றை தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை எதேச்சையாக பார்த்தா அக்கம் பக்கத்தினர் ஒருவர் அலறியதில் பயந்து போன வாலிபர் அந்த நாயை மூன்றாவது மாடியில் இருந்த தனது வீட்டு பால்கனியிலிருந்து சாலையில் வீசியுள்ளார்.

இதில் நாய் காயத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த கேவலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியம் வாலிபர் இந்த சம்பவத்தின் போது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் ஒரு நாய்க்கு எதிராக நடந்த இத்தகைய செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.