திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கேரளம் வழியாக செல்லும் மற்றும் கேரளத்தில் இருந்து வரும் ரயில் சேவையில் மே 20- ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மே 21ஆம் தேதி காலை 9 மணிக்கு குருவாயூர் செல்லும் விரைவு ரயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தப்படும். மருமார்கமாக இந்த ரயில் குருவாயூரிலிருந்து மே 22 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படுவதற்கு பதில் எர்ணாகுளத்தில் இருந்து மே 23ஆம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும்.

அதனைப் போலவே கன்னியாகுமரி மற்றும் புனே இடையே இயங்கும் விரைவு ரயில் கன்னியாகுமரியில் இருந்து மே 21 ஆம் தேதி காலை 8.40 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் வழியாக செல்வதற்கு பதில் திருநெல்வேலி வழியாக செல்லும். திருவனந்தபுரத்திலிருந்து மே 21ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே மங்களூரில் இருந்து மே 20 ஆம் தேதி அதிகாலை 5.05 மணிக்கு நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில், திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் இடையே இயங்கும் சபரி விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.