நடிகர் விஜய்யின் ஆரம்ப காலத்திலிருந்தே விஜய்காந்துக்கும் அவருக்குமான பந்தம் குறித்து நாம் அறிவோம். விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்ததே விஜயகாந்த் தான். அதிலிருந்தே விஜய் இன்று அவர் எட்டியுள்ள உச்சத்தை அடைந்தார். செந்தூர பாண்டியையும் அவரது தம்பி விஜயையும் யாராலும் மறக்க முடியாது. கடந்த டிசம்பர் 28 யில் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவருக்க்கு அஞ்சலி செலுத்தி கண் கலங்கினார் விஜய்.

தற்போது அவரின் வழியில் நடிகனாக இருந்து அரசியல் தலைவராக மாறியுள்ளார் விஜய். நடிகர் விஜய் வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் தான் 1984ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக, தனது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.