கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கை பெறுவது என்பது எளிதான விஷயம் அல்ல. நுழைவுத் தேர்வு படிவத்தில் ஒரு சிறிய பிழை இருந்தாலும் கூட சேர்க்கை ரத்து செய்யப்படும். இந்த பள்ளிகளில் 1 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் ஒன்றாம் வகுப்பில் சேர குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு வயது இருக்க வேண்டும். இந்த வயதுக்கு குறைவான மாணவர்களுக்கான சேர்க்கை படிவம் நிராகரிக்கப்படும்.

இருந்தாலும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் ஆறு வயது பூர்த்தியாகும் மாணவர்களுக்கான படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9, 11 ஆம் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நிலையான குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கை செயல்முறை தொடங்காத நிலையில் மார்ச் 27 முதல் சேர்க்கை தொடங்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kvsangathan.nic மூலம் பெற்றோர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.