கேதார்நாத் செல்லும் பக்தர்களுக்கு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில் கமிட்டி மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. கேதார்நாத் கோவில் மே 10ம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் இந்த கோவிலுக்கு பனிப்பொழிவு  காரணமாக குளிர் காலத்தில் மூடப்படும் கோவில் கோடை காலத்தில் மீண்டும் திறக்கப்படுகிறது. எனவே மே 10 முதல் கேதார்நாத் செல்ல தயாராக இருங்கள்.