கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகம் எடுக்க தொடங்கிய நிலையில், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த 36 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இளைஞர் வீட்டு தனிமையில் உள்ள நிலையில் குடும்பத்தினர் 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பொங்கலை ஒட்டி சொந்த ஊர் திரும்பிய  இளைஞருக்கு கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.