அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை.

அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக கூட்டணி தொடரக் கூடாது என்பது போல உள்ளது. மறைந்த தலைவர் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்துள்ள அண்ணாமலையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறுகிறார். கூட்டணி தொடர்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அமித்ஷாவும், ஜெ.பி.நட்டாவும் தான்” என்று அவர் கூறினார்.