நடிகரும் டைரக்டருமான எஸ்.ஜே.சூர்யா இப்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். பட நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது “ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக என் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். பின் இயக்குனர் ஆகி சம்பாதித்தேன்.

அதிலிருந்து தயாரிப்பாளராகி சம்பாதித்த மொத்த பணத்தையும் கொண்டு நியூ, அன்பே ஆருயிரே படங்கள் எடுத்தேன். இதையடுத்து எடுத்த படங்கள் சரியில்லாமல் போனதால் சறுக்கி கீழே விழுந்தேன். குழிக்குள் போய் விழுந்து திருப்பி அங்கிருந்து எழுந்து இசை என்று ஒரு படம் எடுத்து மீண்டும் தரைக்கு வந்து உட்கார்ந்தேன். அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தில் நடித்து அங்கிருந்து பயணம் தொடங்கி உள்ளது” என்று பேசினார்.