தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து  அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய திருவண்ணாமலையிலுள்ள மூக்குபொடி சித்தர் ஜீவ சமாதியில் நடிகர் தாடி பாலாஜி வழிபாடு செய்து உள்ளார். இது தொடர்பாக தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில், செந்தில் பாலாஜி தனக்கு ஒரு சகோதரரை போன்றவர். அவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஆகவே அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்ததாகவும் நடிகர் தாடி பாலாஜி தெரிவித்து உள்ளார்.