டெல்லி கீர்த்தி நகர் பகுதியில் உள்ள மரக்கடை ஒன்றிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். அங்கு அவர் பள்ளி குழந்தைகளுக்கு செய்யப்படும் மரபெஞ்ச் ஒன்றை தனது கையால் செய்துள்ளார். அப்போது அவர் இந்த பெஞ்சில் குழந்தைகள் அமர்வார்கள் ஆனால் இதை யார் செய்தார்கள் என்று யோசிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த கடையின் உரிமையாளர் இந்த பெஞ்சை செய்தது யார் என்று குழந்தைகளுக்கு தெரிந்தால் அவர்கள் மிகவும் ஆச்சரியமடைவார்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பான காணொளி ராகுல் காந்தியின் youtube சேனலில் வெளியிடப்பட்டுள்ளதுயூடுப்.