திருநெல்வேலியில் 21 மற்றும் 22 வயது பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது, அங்கு கஞ்சா – மது போதையில் இருந்த ஆதிக்க சாதி கும்பல் அவர்கள் சாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்த இளைஞர்களின் உடைகளை களைத்து நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சாதி வெறி கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.