நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது. திமுகவின் கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு என மனுதாரர் எம்.எல் ரவிக்கு நீதிபதி  கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கறிஞர் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் எம்.எல். ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் முக்கிய நோக்கம். திமுக தரப்பில் நடத்தப்படும் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்படுகிறது. இது சட்டவிரோதமானது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதை தொடர்பாக தமிழக அரசிடம் அணுகியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் ம். இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள்,  கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார் ? நீட் தேர்வு விசயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்தால் ? அது  மாணவர்கள் நலனுக்கு விரோதமாக   அமைந்தால் பொதுநலக்காக தொடரலாம்.

அதே சமயத்தில் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என்றாலும் ? இது போன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்வதற்கு ஒரு வரம்பு இருக்கிறது என்று எச்சரித்து இருக்கிறார்கள்.குறிப்பாக மனுதாரரின் வழக்கின் நோக்கத்தை நிரூபிக்கும் வகையில்    ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததை அடுத்து வழக்கை  முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.