உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா குலசை முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முதல் குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு வேடமணிந்து குலசையில் குவிந்து வரும் பக்தர்கள் மேளதாளத்துடன் ஆடி வருகிறார்கள்.