குறட்டை என்பது பலரைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனை. பலருக்கும் இரவு தூங்கும்போது தானாகவே குறட்டை வந்துவிடுகிறது. இந்த பிரச்சனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவரையும் பாதிக்கிறது. இதனால் குறட்டை விடுபவரின் பக்கத்தில் இருப்பவர்களின் தூக்கம் கெடுகிறது.

ஆனால் சில குறிப்புகளை பின்பற்றினால் குறட்டைக்கு குட்பை சொல்லலாம். உடல் எடை சரியாக இருந்தால், குறட்டை முற்றிலும் மறைந்துவிடும். தூங்கும் போது தலை 4 அங்குலம் உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். காற்றுப்பாதைகள் தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.