TNPSC குரூப் 4 தேர்வுக்கான 6,000 மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பம், பிப்ரவரி 28ஆம் தேதி முடிந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை மார்ச் 6ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக தேர்வுக்கு யாரும் விண்ணப்பிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். தேர்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.