2024ஆம் ஆண்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கான அட்டவணையை ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டது. குறிப்பாக அதில் தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது.

குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நேர்முகத் தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை குறித்த விவரங்களை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.