காஞ்சிபுரத்தில் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. அண்மையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென ஏறியதால் பட்டு சேலை விலையும் 30 சதவீதம் ஏறியுள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தேர்தல் காரணமாக வியாபாரம் பாதித்த நிலையில் விலையேற்றத்தால் சேலைகள் வாங்க வாடிக்கையாளர்கள் தயங்குவதால் கோடிக்கணக்கான சேலைகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.