தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. எஞ்சிய 20 சதவீதம் பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவடையும் என்றும் அதன் பிறகு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.