தமிழகத்தில் ஒருங்கிணைந்த குரூப் 2 பணிகளுக்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டி என் பி எஸ் சி அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2a முதன்மை தேர்வுகளில் தேர்வானவர்கள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் முதல் கட்ட நேர்முகத் தேர்வை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு மாற்றி உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.