தோனி குதிரையிடம் அன்பு காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் குதிரையிடம் அன்பு காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில் அவர் குதிரைக்கு ஏதோ ஒன்றை ஊட்டுவதைக் காணலாம். அவருடன் மேலும் சிலரும் உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அமைதியான குணம் மற்றும் மேட்ச் ஃபினிஷிங் திறனுக்கு பெயர் பெற்றவர். இது தவிர விலங்குகளை நேசிக்கும் வீடியோவும் அவ்வப்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் அவர் தனது செல்ல நாயுடன் கேக் வெட்டிக் கொண்டிருந்தார். இப்போது அவரது குதிரை சேடக் உடன் தோன்றுகிறார்..

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ :

தோனிக்கும் அவரது குதிரைக்கும் இடையிலான பிணைப்பு சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சந்திரசேகர் கிங்கரால் பதிவேற்றப்பட்ட இதயத்தைத் தொடும் வீடியோவில் காட்டப்பட்டது. வீடியோ கிளிப்பில், கிரிக்கெட் ஜாம்பவான் சேடக்கிற்கு அமைதியான நேரத்தில் ஏதோ ஒன்றை ஊட்டுவதைக் காணலாம். தோனியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஞ்சி ரிங் ரோட்டில் தோனியின் பண்ணை வீடு உள்ளது :

ராஞ்சி ரிங் ரோட்டில் அமைந்துள்ள இந்த பண்ணை வீடு தோனியின் வெற்றிக்கு சான்றாக மட்டுமல்லாமல், இயற்கை மற்றும் எளிமை சார்ந்த வாழ்க்கையின் மீதான அவரது அன்பையும் பிரதிபலிக்கிறது. இங்கு தோனி அடிக்கடி தனது செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களை அவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

தோனி ஐபிஎல் 2024ல் விளையாடுவார் :

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல்-ல் மட்டுமே விளையாடுவதைக் காண முடிகிறது. ஐபிஎல் 2023ல், இதுவே அவரது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர், ஆனால் ரசிகர்களின் அன்பைப் பார்த்து தோனி ஐபிஎல் 2024ல் விளையாட முடிவு செய்துள்ளார். தற்போது அவர் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பின் மறுவாழ்வில் உள்ளார்.