தமிழ்நாடு முழுவதும் ஓடும் அரசு விரைவு  பேருந்துகளில் மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடுத்து வரும் ஒவ்வொரு பயணித்திலும் 50% கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 50 சதவீத கட்டண சலுகை திட்டம் மே 1-ந் தேதி(இன்று) முதல் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான சாப்ட்வேர் பொறுத்தும் பணி நடந்துவருகிறது. இந்த சலுகை அனைத்து விரைவு பேருந்துகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.