சென்னை உயர்நீதிமன்றம் ஜீவனாம்ச வழக்கு ஒன்றை விசாரித்து புதிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மதுராந்தத்தை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி தம்பதியினர் குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டதால் மனைவிக்கு மாதம் தோறும் 7,500 ஜீவனாம்சம் தொகை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 6.2 லட்சம் தொகை நிலுவையில் உள்ளதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் சரஸ்வதி மரணம் அடைந்துள்ளார்.

இதனால் அவரின் தாய் யார் அந்த நிலுவைத் தொகை வழக்கில் இணைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இறந்து போன மகளின் ஜீவனாம்ச தொகையை பெற அவரின் தாய்க்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்ட அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.