சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில்,  ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிதிநிலை சரியாக இல்லாததால் இதுவரை பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கவில்லை; கவலை வேண்டாம் வரும் பட்ஜெட்டில் ரூ.1000 வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறிய உடன், கூட்டத்தில் இருந்த பெண்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.