குட்கா முறைகேடு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என  சிபிஐ உயர்நீதிமன்றத்தில் கோரியது. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற ஜூலை 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் 10-வது முறையாக வழக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது