கர்நாடக மாநிலத்தில் கிரகலட்சுமி திட்டம் இன்று ஆகஸ்டு 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றுள்ள நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டு ரூபாய் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை இன்று ஆகஸ்ட் 30ஆம் தேதி மைசூரில் வயநாடு எம் பி ராகுல் காந்தி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 1.30 கோடி பெண்கள் பயன்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.